இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
எனினும் லாகூருக்கான சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தியாவுக்கு செல்லும் விமானங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.