இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட வாசனைப் பொருட்களை கைப்பற்றிய கடற்படையினர்

0 0

தமிழக கடற்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 320 கிலோ சுக்கு மற்றும் 150 கிலோ ஏலக்காய் என்பவற்றை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது கண்ணாடி இழைப்படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினர் கண்காணிப்புப் பணியின்போது சந்தேகத்திற்குரிய முறையில் புத்தளம்- கல்பிட்டி கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகை நேற்று அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, 12 மூடைகளில் 320 கிலோ சுக்கு மற்றும் 150 கிலோ ஏலக்காய் இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் ஏலக்காய் என்பன சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.