இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

0 0

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து கம்பளை ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் இன்று(14) காலை உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பேருந்து விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 40 பேர் நாவலப்பிட்டி, கம்பளை, நுவரெலியா ஆகிய இடங்களில் உள்ள அடிப்படை மருத்துவமனைகளிலும், பேராதனை மற்றும் கண்டியில் உள்ள போதனா மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.