யாழில் தனது வாக்கை பதிவு செய்த சுமந்திரன்

0 6

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் யாழ். மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை முதல் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது வாக்கைச் செலுத்தியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் அவர் தனது வாக்கினைச் செலுத்தினார்.  

அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யாழ். துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைச் செலுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.