புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் முக்கிய முடிவு: மனம் மாறும் ட்ரம்ப்!

0 4

ஆவணமற்ற புலம்பெயர் மக்கள் தானாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் (Donald Trump) ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்படி, சுயமாக நாடு கடத்தப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட நிதி சலுகைகளை வழங்கவுள்ளதாக ட்ரம்ப தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, கடுமையான குற்றப் பதிவுகளைக் கொண்ட நபர்களை நாடு கடத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில் “நல்ல” நபர்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குத் திரும்புவதற்கான வழியை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ட்ரம்ப் விரிவாக கூறுகையில், “நாங்கள் அவர்களுக்கு ஒரு உதவித்தொகை வழங்கப் போகிறோம். நாங்கள் அவர்களுக்கு கொஞ்சம் பணம் மற்றும் விமான டிக்கெட்டை வழங்கப் போகிறோம்.

பின்னர் அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம், அவர்கள் நல்லவர்களாக இருந்தால், அவர்களை மீண்டும் உள்ளே வர விரும்பினால், முடிந்தவரை விரைவாக அவர்களை மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம்.” எனக் கூறியுள்ளார்.

இந்த புதிய அணுகுமுறையானது, குடியேற்றம் குறித்த ட்ரம்பின் முந்தைய கடுமையான நிலைப்பாட்டிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் சில நபர்கள் சட்டப்பூர்வமாக திரும்பி வருவதற்கான மென்மையான பாதையை உருவாக்குவதில் கவனம் செலுத்துப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த திட்டத்தின் விவரங்கள், அதன் செயல்படுத்தல் காலக்கெடு மற்றும் தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.