அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு மோசமடைந்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் வர்த்தகம் 80வீதம் வரை குறையக்கூடும் என்று உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ளது.
உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில், இது 466 பில்லியன் டொலர் வீழ்ச்சியைக் குறிக்கும், கடந்த ஆண்டு இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் 582.5 பில்லியன் டொலர் பொருட்களை விற்ற வர்த்தக புள்ளி விபரங்களின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் தலைவர் டொக்டர் ந்கோசி ஒகோன்ஜோ-இவெலா இது தொடர்பிலான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உலக வர்த்தகத்தில் சுமார் 3 வீத பங்கைக் கொண்ட உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான இந்த பரஸ்பர அணுகுமுறை, உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தை கடுமையாக சேதப்படுத்தும் பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது.
எனவே, அமெரிக்கா – சீனா தகராறால் மற்ற நாடுகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக வசதி குறைந்த நாடுகள் தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் உலக வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தை இரண்டு தொகுதிகளாகப் பிரிப்பது உலகளாவிய உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 7வீத நீண்டகாலக் குறைப்புக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில், உலக வர்த்தக அமைப்பின் 166 உறுப்பினர்கள், உலக வர்த்தக விதிகளை நிலைநிறுத்த இன்னும் பலவற்றைச் செய்யுமாறு அந்த அமைப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாயன்று, ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக வர்த்தக விதிகளை வடிவமைத்து நிலைநிறுத்தும் நிறுவனத்தில் ஜனாதிபதி ட்ரம்பின் வரிகள் தொடர்பாக சீனா தனது சமீபத்திய சர்ச்சையைத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.