இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) இடையில் நேற்று (01) சந்திப்பு நடைபெற்றுள்ளது.
புதுடில்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன என்று இந்தியப் பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.