வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

0 4

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா, கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

இச் சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையில் உப பொலிஸ் அதிகாரி எல்.எஸ்.வீரசிங்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான நிரோஜன் (8137), தீபன் (80998) அடங்கிய குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா, கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து  35 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.