இந்தியாவுடன் நீடிக்கும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு அதிநவீன PL-15 ஏவுகணைகளை சீனா அவசரமாக வழங்கியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் நிலையில், பாகிஸ்தான் விமானப்படை (PAF) சீனாவின் மிகவும் உயர்தரமான PL-15 ஏவுகணைகளை அவசரமாக பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் விமானப்படை, தற்போது தனது புதிய JF-17 Block III போர்விமானங்களில் PL-15 Beyond Visual Range (BVR) ஏவுகணைகளை களஞ்சியப்படுத்தியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஏவுகணைகள் சீன விமானப்படை இருப்பிடங்களில் இருந்து நேரடியாக வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
PL-15 ஏவுகணைகள், 200 – 300 கிமீ வரையான மிக நீண்ட தூரத்தை அடையக்கூடியவை. இது பாகிஸ்தான் விமானப்படைக்கு இந்திய விமானப்படையை (IAF) அதிக தொலைவில் இருந்து தாக்கும் திறனை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சீனாவின் PL-15, அமெரிக்காவின் AIM-120D மற்றும் ஐரோப்பியாவின் Meteor ஏவுகணைகளுடன் ஒப்பிடப்படுகிறது.
Meteor ஏவுகணைகளை இந்தியா தனது ரஃபேல் விமானங்களில் ஏற்றியுள்ளது. இருப்பினும், PL-15 ஏவுகணைகள் விரைவான வேகத்தையும் நீண்ட இலக்குகளை தாக்கும் திறனையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அபாயத்திற்கு எதிராக, இந்திய விமானப்படை ரஷ்யாவின் R-37M ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை பரிசீலிக்கிறது. இந்த ஏவுகணைகள் 300-400 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்க முடியும்.
இதற்கிடையில், இந்தியா தனது உள்நாட்டு அஸ்திரா (Astra) Mk-III திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறது. புதிய அஸ்திரா ஏவுகணை 340 கிமீ தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் ஆயுதங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு வலிமையை மேம்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.