நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு தேசிய பாதுகாப்பு குறித்து எங்களுக்கு பாடம் சொல்ல வரும் அரசாங்க அமைச்சர் ஒன்று கூறும்போது, விமானப்படை மற்றொன்று கூறுகிறது. இது நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவாகக் காட்டுகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலுக்காக மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்று அதிவேக நெடுஞ்சாலை கட்டும்போது அதற்கு எதிராக விமர்சனம் செய்தவர்கள் இன்று மாத்தறை கூட்டங்களுக்கு அதே அதிவேக நெடுஞ்சாலையில் தான் வருகிறார்கள்.
குறிப்பாக, முப்பது வருட போரை முடிவுக்கு கொண்டு வர தலைமை தாங்கி கட்டளையிட்டவர் மகிந்த ராஜபக்சதான்.
போரில் ஏதேனும் தவறு நடந்திருந்தால், தலைமை தாங்கியவரிடம் கேட்பதற்கு பதிலாக, இராணுவ வீரர்களை தாக்குவதுதான் இங்கு இடம்பெறுகின்றது.
இந்நிலையில், கருணா அம்மான் அன்று செய்த தவறு விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகியதுதான். அன்று விடுதலைப்புலிகள் அமைப்பும், ஜே.வி.பி.யும் செய்தவற்றை மறந்துவிட்டு, இன்று இராணுவ வீரர்களை தாக்க முயற்சிக்கிறார்கள்.
எங்களுக்கு சவால்களை எதிர்கொள்ள முடியும். நாங்கள் அவற்றை எதிர்கொண்டும் உள்ளோம்.
வெகு விரைவில் மக்கள் ஆதரவுடன் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.