குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு

0 7

குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.

இந்த விடயத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார்.

மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.