வைத்தியசாலையில் நடந்த துயர சம்பவம் – பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த கதி

0 3

திடீர் சுகயீனம் காரணமாக கேகாலை, ஹெம்மாத்தகம அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவனுக்கு, அதிபரின் கடிதம் இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹெம்மாத்தகம மருத்துவமனையின் மருத்துவர் இவ்வாறு கூறியதை அடுத்து, முச்சக்கர வண்டியில் மாவனெல்ல மருத்துவமனைக்கு மாணவன் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஹெம்மாதகமவில் உள்ள பள்ளிப்போருவ முஸ்லிம் பாடசாலையில் 4 ஆம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பாடசாலை ஆசிரியர் ஒருவர் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியாக பணிபுரியும் தந்தை, விரைவாக பாடசாலைக்கு சென்று, மாணவனை ஹெம்மாதகம பிராந்திய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவன் ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்ததுடன், வாந்தி எடுத்த நிலையில், உடல் மிகவும் சூடாக காணப்பட்டுள்ளது.

பாடசாலை சீருடையில் இருந்த மாணவர் மருத்துவரிடம் அழைத்து சென்றபோது, ​​அவரிடம் பாடசாலை பை இல்லை என்று கூறி மருந்து மறுக்கப்பட்டது.

பின்னர் அதிபரின் கடிதம் இல்லாமல் மருந்து கொடுக்க முடியாது என கூறப்பட்டது.

அதற்கமைய, உதவியற்ற தந்தை, மிகுந்த அதிர்ச்சியில், மாணவனை சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மாவனெல்ல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஊடகங்களிடம் பேசிய தந்தை, தன்னிடம் பணம் இருந்தால், மாணவனை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.