உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்

18

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதற்கமைய, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Comments are closed.