இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று(09.04.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.