உலக சாதனை படைத்த மைத்திரி

0 5

உலகிலேயே அதிக வழக்குகளைக் கொண்ட நபர் தான் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

தான் மற்றவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில்லை. ஆனால் மற்றவர்கள் தனக்கு எதிராக சுமார் 400 வழக்குகளை தொடுத்துள்ளதாகவும், உலகிலேயே அதிக வழக்குகளை கொண்ட நபராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தான் என்றென்றும் வாழப் போவதில்லை. அந்த வழக்குகளும் ஒரு நாள் தான் மரணிக்கும் போது முடிவுக்கு வரும் என அவர் கூறினார்.

மகாத்மா காந்தி, ஆபிரகாம் லிங்கன், பண்டாரநாயக்க போன்ற அரசியல் தத்துவஞானிகள் சுட்டுக் கொல்லப்பட்டது போன்று, ஒரு குழுவினர் தனது கொள்கைகளையும் அழித்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.