பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பில் அறிவித்துள்ளது.
பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் இன்றுடன் நிறைடையவிருந்த நிலையில், கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.