கடன் அட்டை பயன்பாடு குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

0 1

2024 டிசம்பரில் இலங்கையில் (Sri Lanka) கடன் அட்டை பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

நவம்பரில் 1,951,654 ஆக இருந்த செயலில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை 1,970,130 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இது 2023 டிசம்பரில் 1,917,085 அட்டைகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறிக்கிறது.

கடன் அட்டைகளில் நிலுவைத் தொகையும் அதிகரித்து, நவம்பரில் ரூ.151,614 மில்லியனாக இருந்த நிலையில், டிசம்பர் 2024 இல் ரூ.157,957 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.