கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க பெண் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாரிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் நேற்று மாலை 5 மணியளவில் தேர்தல் பணிக்காக வருகைத்தந்திருந்தார்.
குறித்த அதிகாரி கன்னொருவ தாவர மரபணு வள மையத்தில் மேம்பாட்டு அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கலகெதர, மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க என்ற 33 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.