காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி.. ஹமாஸ் விடுத்துள்ள அறிவிப்பு

0 0

காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய – அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய ஆயுதக் குழு, கத்தாரில் உள்ள அமெரிக்க நிர்வாக அதிகாரியுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள் பல நாட்களாக நடந்து வருவதாகவும், ஒரு போர்நிறுத்தத்தை உறுதி செய்வதிலும், மனிதாபிமான உதவிகள் நுழைவதை எளிதாக்குவதிலும் கவனம் செலுத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், அலெக்சாண்டரை விடுவிக்க ஹமாஸுக்கு திட்டம் இருப்பதாக அமெரிக்காவால் தெரிவிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.