காலி, ஹபராதுவ பகுதியில் வீடொன்றில் ஆயுதங்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
02 ரிவோல்வர்கள், தோட்டாக்கள் மற்றும் 02 வாள்களுடன் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் வெல்லேகேவத்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவோல்வர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரில்வர், 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.