கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பு – ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி

0 9

கொழும்பு துறைமுகம் – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget – 2025) முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.