தேசிய மக்கள் சக்தி ஆட்சியை பெறுவதற்காக பொய் கூறியமையை நிரூபிக்க கட்சியின் 159 உறுப்பினர்களும் ஒன்றிணைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.
மாதம்பே ஆலயமொன்றில் வழிபாடு நடத்திய பின்னர் ஊடகங்களுக்குப் கருத்து தொிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், பொய் சொல்வதை தங்கள் உரிமையாக சித்தரிக்கவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்றும் நாமல் தெரவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்கள் முன் அறிவிப்பது, அந்தப் பொய்களை மீண்டும் சொல்வதை விட முக்கியமானது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.