எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வடக்கு,வடமத்திய, வடமேல்,மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உடலுக்கு தேவையான அளவு நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.