வவுனியாவில் (Vavuniya) தொடருந்து மோதியதில் போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து வவுனியா – அவுசதப்பிட்டிய பகுதியில் இன்று (31.01.2025) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் வவுனியா பொது வைத்தியசாலயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Comments are closed.