2025ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை விடுமுறை காலம் குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலையின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.