இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் மொத்தம் 6,092 இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் இதுவரை 1,018 இலங்கையர்கள் இஸ்ரேலிற்கு வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நேற்று (05.03.2025) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் (SLBFE) மேலும் 20 இலங்கையர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.