வெளிநாட்டிலிருந்து பால் மாவுடன் இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

0 4

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உடலை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின் அடங்கிய பால் மாவுடன் வந்த இருவரை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் டின்னில் அடைக்கப்பட்ட 179 பால் மா டின்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த விட்டமின்களின் பெறுமதி 18 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டஹேன மற்றும் நீர்கொழுப்பு பகுதிகளை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.