பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காலணி வவுச்சர் செல்லுபடியாகும் இறுதித் திகதி பெப்ரவரி 28 என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், செல்லுபடியாகும் காலத்தை மார்ச் 20ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.