கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர், சந்தேக நபரின் காதுகளைப் பாதித்துள்ள உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டி, தனது வாடிக்கையாளருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரியுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபரின் வழக்கறிஞர், இந்த விடயத்தை நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
அதன்போது, முறையான காவல்துறை நடவடிக்கைகளின் மூலம் மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு வழக்கறிஞர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தடுப்புக்காவல் மற்றும் விசாரணை நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தி, வழக்கில் நீதித்துறை மேற்பார்வைக்கான தனது கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளார்.
இவ்வாறாதொரு பின்னணியில், கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றினுள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்ததுடன், சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 08 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.