ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராண விசாரணை! பாதுகாப்பு தரப்பின் அறிவிப்பு

0 12

எதிர்காலத்தில் வெளியே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை விசாரணை செய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் முறையான நடைமுறைகளின்படி நிறுத்தப்பட்டதாக விஜேபால கூறியுள்ளார்.

எனினும், நீதிமன்றத்தில் துப்பாக்கிகளைப் பயன்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை என்றும், சட்டத்தரணிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் மக்களைச் சேதனைக்கு உட்படுத்தும் தரப்பில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற ஒன்று நடைபெறாது தடுக்க அவர் அதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் புலனாய்வு அமைப்புகள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பொது பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்த தனது அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.