அநுர அரசுக்கு விவசாயிகள் கொடுத்த ஏமாற்றம்

18

நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

சில விவசாயிகள் ஏற்கனவே தங்கள் அறுவடை மாதிரிகளை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சோதனைக்காக சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்தார்.

இருப்பினும், விவசாயிகள் இன்னும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை வழங்கவில்லை என்றும் தலைவர் கூறினார்.

இதேவேளை, விவசாயிகள் தங்கள் அறுவடையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்க வேண்டும் என்று அனுராதபுரம் பெரும்போக கூட்டு விவசாயிகள் அமைப்பின் தலைவர் புஞ்சிரல ரத்நாயக்க இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“எந்த அரசாங்கம் வந்தாலும், அவர்கள் தண்ணீர், உரம் மற்றும் பிற பொருட்களை நிர்வகிக்கிறார்கள். அது ஒரு அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையுடன், விவசாயிகளின் கடமையும் இருக்கிறது.

நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு களஞ்சியசாலையிலும் ஒரு மூட்டை நெல் கூட இல்லை. காலியான களஞ்சியசாலைகளை காட்டும்போது எங்களுக்கு வருத்தமாகவும் இருக்கிறது.

களஞ்சியசாலைகளை திறக்கப் போராடியவர்கள் நாங்கள்தான். அப்படி நாங்கள் கூச்சலிட்டதன் விளைவாக, நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் களஞ்சியசாலைகளுக்கு கொடுப்பது எங்கள் கடமை அல்ல, முடிந்தவரை கொடுப்பதுதான் எங்கள் கடமை. அப்போது களஞ்சியசாலைகள் நிரம்பிவிடும்.

அனைவருக்கும் நியாயமாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் கொண்டு வருகிறேன். அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு கொஞ்சம் நெல் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், நுகர்வோரைப் பாதுகாக்கும் ஒரு திட்டத்திற்குச் செல்லலாம்.” எனத் தெரிவித்தார்.

Comments are closed.