2025 ஆண்டுக்கான அநுர அரசின் மொத்த செலவுத் தொகை வெளியானது!

17

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்திற்கான அரசாங்கத்தின் செலவு ரூ. 4,616 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய (இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மிகப்பெரிய தொகை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது 713 பில்லியன் ரூபாய் ஆகும்.

அத்தோடு, இந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 2,518 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 354 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சுகளுக்கு ரூ. 412 மில்லியன் என்பதுடன், அதற்கான மதிப்பிடப்பட்ட மூலதனச் செலவு ரூ. 95,500 மில்லியன் ஆகும்.

இதேவேளை, கடந்த ஆண்டு, மதிப்பிடப்பட்ட தொடர்ச்சியான செலவு ரூ. 3,673 மில்லியனாகவும், மூலதனச் செலவு ரூ. 528 மில்லியனாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.