வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.