இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
அதன்படி, முதல் கட்ட விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.
இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.
இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.