இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

0 0

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.

இது பற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது அவர் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. நாங்கள் எங்கள் பாதுகாப்பிற்காக எதையும் செய்வோம்.

மசூதிகள் அழிக்கப்பட்டு அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் நாம் நம்முடைய ராணுவ ரீதியிலான கொள்கைகளில் வெற்றி பெற்றுவிட்டோம்.

சிந்து நதிநீர், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.

எங்களுடைய நம்பிக்கையான நண்பன் சீனாவுக்கு நன்றி. பாகிஸ்தானுக்கு தேவை ஏற்படும் போது சீனா தான் உதவி செய்கிறது. மேலும் நான் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.