மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் ஆளும் கட்சியின் நிலைப்பாடு

0 3

மின்சாரக் கட்டண அதிகரிப்பினை தவிர்க்க முயற்சிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முனில் முலாபீர் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் செய்துள்ள பரிந்துரை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வங்குரோத்து அடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நிலையில் பல்வேறு துறைகளில் நெருக்கடிகள் காணப்படும் நிலையை தாம் நன்கு அறிவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடிகளை தீர்த்து முன்னோக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முடிந்தளவு முயற்சிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.