இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

14

1,40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் இன்று (25) ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 25,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Comments are closed.