சுட்டுக் கொல்லப்பட்ட குற்றவியல் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவரது உடலை அடக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பொலிஸ் பிணவறையில் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசாரணைக்குப் பிறகு, அவரது உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.