உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி

0 10

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

“எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்” என்ற கருப்பொருளின் உலக அரசாங்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதற்கிடையில், ஜனாதிபதி இன்று உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பல அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு இராஜியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.